Close
மார்ச் 7, 2026 4:18 மணி

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வரும் 15.10.2025 அன்று தொடங்கப்படவுள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பம் வருகிற 15.10.2025 வரை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

பயிற்சி காலம் 2 மாதம் (100 மணி நேரம்). இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சிக் கட்டணம் ரூ.4,550 செலுத்த வேண்டும். இக்கட்டணத்தில் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரமும் செயல் முறை பயிற்சியும் அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தபின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top