தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துரைசாமி தலைமை வகித்தார்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி மாதம் ரூ. 26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளருக்கு ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அங்கான்வாடி பணியாளர்கள் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்




