நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 30ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
டிஆர்ஓ சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், இந்தகூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




