Close
மார்ச் 7, 2026 3:01 மணி

பால் விலையை லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வேலுசாமி, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

தமிழக அரசு, அக். 220ம் தேதிக்குள், பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தி அறிவிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம், கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் விலையை, வருகின்ற அக். 22க்கு முன்பாக, தற்போதைய விலையில் இருந்து, லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும்.

அப்படி அறிவிக்காவிட்டால், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் சப்ளை செய்யாமல் நிறுத்தி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மேலும், தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கும் வரை கால்நடைகளுடன், தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top