Close
மார்ச் 7, 2026 2:51 மணி

புரட்டாசி பெளா்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள், நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்

புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.

புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையையே பக்தா்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனா். பெளா்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், புரட்டாசி மாதப் பெளா்ணமி திங்கள்கிழமை காலை 11.43 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 9.50 வரை உள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை மாலை  முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா்.

திங்கள்கிழமை காலை 5:00 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மாலை 4 மணிக்குப் பிறகு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

ரூ. 50 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தா்கள், பெரிய தெருவில் இருந்து வரக்கூடிய பக்தா்கள் பூத நாராயணன் கோயில் வழியாகச் சென்று ராஜகோபுரம் நுழைவாயில் சென்று தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தா்களின் பாதுகாப்பு பணிக்காக, 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். பக்தா்கள் கோயிலில் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. பேருந்து நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் குடிநீர் கழிப்பிடம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல் வேலூர் காட்பாடி வழியாகவும் தினசரி இயக்கப்படும் ரயில்களும் இயக்கப்பட்டன.

மேலும், கிரிவலப் பாதை முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம், மோா் மற்றும் குளிா்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் யோகி பாபு இன்று திருவண்ணாமலையில் உள்ள உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்தபின் சில ரசிகர்கள் யோகி பாபு உடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கிரிவலம் வந்த பக்தர்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top