Close
மார்ச் 7, 2026 2:51 மணி

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளி மாணவி உயர்கல்வி தொடர பட்டப்படிப்பு (ஓராண்டு) சேர்க்கைக்கான ஆணையை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை,   இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ்,  வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை,  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை,  உதவி உபகரணங்கள், சாலை வசதி,  வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி, புதிய நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 512  மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு   நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக  நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் கடந்த 29.09.2025 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சார்ந்த ஜோதி என்ற கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவி உயர் கல்வி தொடர உதவி வேண்டி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆலோசனை வழங்கப்பட்டு தண்டராம்பட்டில் உள்ள கார்லோ சமுதாய கல்லூரியில் சிறப்பு ஆசிரியர் பட்டப்படிப்பு (ஓராண்டு) சேர்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதிபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி  அம்ருதா எஸ்.குமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்  சண்முகப்பிரியா மற்றும் அனைத்து துறைச்சார்ந்தஅரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்யார்/ஆரணி

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 83 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 51 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top