Close
மார்ச் 7, 2026 2:53 மணி

மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் ஒன்று முதல் 5 -ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் நடைபெற்றன.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா, வட்டாரக் கல்வி அலுவலா் தமிழரசி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனா்.

இதில், 87 பள்ளிகளில் இருந்து 254 மாணவ, மாணவிகள் நடனம், நாடகம், களிமண் பொம்மை தயாரித்தல், கருத்துக் கூறுதல், பாட்டுப் பாடுதல் என 9 வகையிலான போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநா்கள் உதயசங்கா், மேனகாதேவி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

கீழ்பென்னாத்தூர் 

கீழ்பென்னாத்தூரில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடந்தது. கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு தலைமை வகித்து பேசினார், வட்டாரக் கல்வி அலுவலர் ஜோதி முன்னிலை வகித்து பேசினார், வளமைய மேற்பார்வையாளர் செல்வம் வரவேற்றார்.

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை அனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருணாகரன், ரமேஷ், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முருகன், பூர்ணசந்திரன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சுடர்விழி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

அப்போது பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி களிமண், மணல் ஆகியவற்றால் சிற்பங்களை செய்தல், தனிநபர் நடிப்பு, வில்லுப் பாட்டு, மாறுவேடப்போட்டி, நடனம் , பரதநாட்டியம் போன்ற போட்டிகளில் பள்ளி அளவில் மற்றும் குறுவள மைய அளவில் முதலிடம் பெற்ற 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

ஒன்றிய அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. முடிவில் கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுனர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top