Close
மார்ச் 7, 2026 4:26 மணி

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் சாலை

மதுரை மாவட்டத்தில் காலை முதலே பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பல இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, மேலூர், அழகர்கோவில், கருப்பாயூரணி, செக்கானூரணி, ஆண்டிபட்டி, தேனி, திருப்பரங்குன்றம், மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை நகரில் அண்ணாநகர், தாசில்தார் நகர் ஆறாவது மெயின்ரோடு, மருதுபாண்டியர் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, வீரவாஞ்சி தெரு, அன்பு மலர், மதிச்சியம் முதலியார் காலனி உள்பட தெருக்களில் சாக்கடை நீருடன் மழை நீர் பெருகி ஓடியதால் பொது மக்கள் அவதியுற்றனர்.

மதுரை மாநகராட்சி நிர்வாகமானது, சாலையில் பெருக்கெடுக்கும் கழிவு நீரை சீர்செய்ய ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், அய்யமார் பொட்டல் காமராசர் சிலை அருகேயும், மழை காலத்தில், கழிவு நீர் வாய்க்கால் நீர் சாலையில் பெருக்கெடுத்து குளம் போல தேங்கியுள்ளது. இதற்கு சோழவந்தான் பேரூராட்சித் தலைவர், நிர்வாக அதிகாரி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் சோழவந்தான் பூமேட்டுத் தெரு சிவன் கோயிலை சுற்றி சிலர் கால்நடைகளை கட்டி அசுத்தம் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து சோழவந்தான் பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top