ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி மற்றும் சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதை நோக்கமாகக் கொண்டது
நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நவ. 3, 4 தேதிகளில் வீடு தேடி உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
நடப்பு மாதத்திற்கான உணவுப் பொருட்கள் வரும் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி ஆகிய நாட்களில் நேரடியாக விநியோகம் செய்யப்படும். எனவே, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே உணவுப் பொருட்களைப் பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.




