Close
மார்ச் 7, 2026 1:28 மணி

பி.எம்.கிசான் நிதி உதவி பெற தனித்துவ அடையாள எண் அவசியம்: கலெக்டர்

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும், விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால்தான் அடுத்த தவனை நிதி உதவி பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவி திட்டம் கடந்த 2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2000 வீதம், ஆண்டிற்கு ரூ.6000, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பி.எம்.கிசான் பயனாளிகள் வரும் காலங்களில் தவணைத் தொகை பெற, தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என உறுதியாக தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் 13,416 பி.எம்.கிசான் பயனாளிகள் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். பி.எம்.கிசான் தவணைத் தொகை தொடர்ந்து கிடைத்திட, இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் உடனடியாக அதைப்பெற்று பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top