நாமக்கல் பகுதியில் ஆர்டிஓ நடத்திய வாகன சோதனையில், பல்வேறு குற்றங்களுக்காக, 54 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தடை செய்யப்பட்டது.
நாமக்கல் பகுதியில், தெற்கு ஆர்டிஓ முருகேசன் தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பஸ்கள், கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டன.
840 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அதில், 242 வாகனங்களுக்கு பல்வேறு குற்றங்களுக்காக சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 6 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
மேலும், 54 நபர்களின் டிரைவிங் லைசென்ஸ் தடை செய்யப்பட்டது. சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்ட, 242 வாகனங்களுக்கு, பல்வேறு குற்றங்களுக்காக, இணக்க கட்டணம் ரூ. 7 லட்சத்து, 86,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 62,300 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.




