நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதியை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி பிரிக்கப்பட்டு தனியாக இயங்கி வருகிறது. நாமக்கல் கண்டர் பள்ளி தெருவில் உள்ள இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் கணக்களை பராமரிக்கும் பிரிவு (கோர் பேங்கிங் சோல்யூஷன்) மற்றும் கம்ப்யூட்டர் மூலம் காசோலை பரிவர்த்தனை பிரிவு (சிடிஎஸ்) ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. வங்கியின் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., முன்னிலை வகித்தார். தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வங்கியின் புதிய பிரிவுகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
விழாவில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான இ-ஆட்டோ கடன், வீட்டு அடமானக் கடன், வீட்டு வசதிக் கடன், பணியாளர் வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட ரூ. 66 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை 6 பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, மத்தியக் கூட்டுறவு வங்கியின் @மலாண்மை இயக்குனர் சந்தானம், பொது மேலாளர் தீனதயாளன், முதன்மை வருவாய் அலுவலர் பால் ஜோசப் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




