ஹரியானாவில் நடைபெறும் தேசிய கபடி போட்டிக்கு, தமிழக அணிக்கு, பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட, எஸ்.வாழவந்தியை சேர்ந்தவர் நாகராஜ். அவரது மகன் சபரி (16). இவர், பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்.
வரும், 27 முதல், 30ம் தேதி வரை, ஹரியானா மாநிலத்தில், 35வது தேசிய சப்ஜூனியர் சிறுவர் கபடி போட்டி நடக்கிறது. அதில் தமிழக அணி சார்பில் விளையாட மாணவர் சபரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் சபரி, தற்போது தமிழக அணியுடன் இணைந்து பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர் சபரியை, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி வழி அனுப்பிவைத்தனர்.




