Close
மார்ச் 7, 2026 11:30 காலை

சோழவந்தான் அருகே வட்டார வேளாண்மை மையம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் வேளாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி தலைமை வகித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். தமிழ்நாடு அரசின் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விளக்கி கூறினார்.

வேளாண் அறிவியல் நிலைய துணை பேராசிரியர் டாக்டர் சுரேஷ் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விளக்கி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் பெருமாள் மாநில வேளாண்மை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் திட்டங்களை எடுத்து கூறினார்.

முகாமில் குருவித்துறை, மன்னாடிமங்கலம், தென்கரை, ஊத்துக்குளி ஐந்து வாசல் விவசாயிகள் நல சங்கம் உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விக்டோரியா செலஸ் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா உதவி தொழில்நுட்ப மேலாளர் பூமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top