Close
மார்ச் 7, 2026 4:41 மணி

நாமக்கல்லில் 7 மையங்களில் ‘டெட்’ தேர்வு: 1,475 தேர்வர் பங்கேற்பு, 233 பேர் ‘ஆப்சென்ட்’

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி), 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழகப் பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றத் தகுதி பெறுவதற்காக நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்), தமிழகம் முழுவதும் நேற்றும், இன்றும் (நவ., 16) நடக்கிறது. தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, 4.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஜெய் விகாஸ் மேல்நிலைப்பள்ளி, டிரினிடி அகாடமி, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி என 7 மையங்களில் இத்தேர்வு நடந்தது.

அதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 1,708 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இன்று நடந்த தாள் 1 தேர்விற்கு, தேர்வர்கள், காலை 8:30 மணி முதல் வருகை தரத்துவங்கினர். 9:30 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்த தேர்வில் 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்று (நவ. 16) நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு, தாள் 2ல் 9,656 பேர் பங்கேற்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top