Close
மார்ச் 7, 2026 2:53 மணி

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும்: மாநில பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி, மாநில பாஜக துணைத்தலைவர்

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் நிச்சயம் இணைந்து விடுவார்கள். அது அவர்கள் உட்கட்சி விவகாரம், அதற்கு பாஜக தடையாக இருக்காது.

பீகார் தேர்தல் முடிவுகள், தமிழகத்திலும் 2026 ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பிரதிபலிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களவையில் அதிக எம்.பி வைத்துள்ள காங்கிரஸ் தான் எதிர்கட்சி, திமுக அல்ல. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்வது போல் எதிரி கட்சி தான் திமுக. மேலும், பிரதமர் கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கின்ற கட்சியாக திமுக இருந்து வருகிறது.

தேர்தல் கமிஷன் மீது வழக்குப் போட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது, ஒரே நேரத்தில் 14 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டுமே நடைபெறுவது போல் தேர்தல் கமிஷனின் பணியை முடக்குவது போல் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கின்றார்.

எஸ்ஐஆர் இப்போது வேண்டாம் என கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை, தேர்தல் கமிஷனின் மீது வழக்குப் போடுவது பாஜகவுக்கு எதிராக தான் செயல்படுவது போல் தோழமை கட்சியினருக்கு சொல்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நியாயமான, உண்மையான வாக்காளர்களைக் கொண்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று பாஜக மற்றும் அதிமுக கட்சியினர் தங்கள் கட்சியினரை வாக்காளர் பட்டியில் திருத்தப் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top