திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அ மைச்சர் எ.வ.வேலு அவர்களை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.
தூய்மை அருணை திட்டத்திற்கு 4 மேற்பார்வையாளர்களும், 39 வார்டுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி தூய்மைப்பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மைக் காவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூர்வாருதல் என செயல்பட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மாதந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை கடந்த ஜூலை மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள நகர்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு அருணை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங் தலைமை வகித்தார்.அருணை கல்விக்குழுமங்களின் துணைத் தலைவர் எ.வ.வே. குமரன், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சி.இ.ஒ.பேராசிரியர் அசோக் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.சும்பன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முன்னதாக மகப்பேறு மருத்துவர் டாக்டர் கவிதா மருத்துவ ஆலோசனைகளை வழங்கி பேசினார். விழாவில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், கர்ப்பிணி பெண்களுக்கு பட்டுச்சேலை, இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,\: இந்த ஒரு நல்ல நிகழ்ச்சியை தூய்மை அருணை அமைப்பும், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இணைந்து செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் நமது அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்தான், அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் பணியிலும் சாதனை படைத்துவருகிறார். இதற்கு முன்பு அவர் உணவு துறை அமைச்சராக இருந்த போது, பொதுத்துறை வினியோகம் குறித்து உச்சநீதிமன்றமே பாராட்டி இருக்கிறது.
அவர் இந்த தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பத்து நமக்கெல்லாம் ஒரு வரப்பிராசதமாகும். இவர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் அற்புதமான கண்ணாடி பாலத்தை உருவாக்கியவர். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிகட்டு அரங்கம் என பல சாதனைகளை செய்தவர்.
இந்த மாவட்டத்திலும் அவர் பல சாதனைகளை செய்து இருக்கிறார். அதையும் தாண்டி தூய்மை அருணை அமைப்பின் மூலமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்சி மாதம்தோறும் நடத்தி வருகிறார்.
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோ, அல்லது உங்கள் சகோதரர்களோ உங்களுக்கு வளைகாப்பு நடத்துகிறார்களோ இல்லையோ, தூய்மை அருணை அமைப்பு உங்கள் உடன் பிறந்த சகோதரனாக இருந்து உங்களுக்கு வளைகாப்பு நிகழ்சியை நடத்துகிறது. உங்கள் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . அப்போது தான் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
தியாக மனப்பான்மையுடன் அருணை மருத்துவக்கல்லூரி உங்களுக்கான சேவையை செய்து வருகிறது. இந்த விழாவின் மூலமாக மருத்துவம னையை பாராட்டுகிறேன் என வாழ்த்தி பேசினார்.
நிறைவாக தூய்மை அருணை மேற்பார்வையாளர் ப்ரியா விஜயரங்கன் நன்றி கூறினார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாநகர செயலாளர் கார்த்தி வேல் மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், அருணை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சேஷாத்ரி மற்றும் மருத்துவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




