Close
மார்ச் 7, 2026 4:25 மணி

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்

வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு, திரளான விவசாயிகள் நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், வளையபட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கு உண்டான 750 ஏக்கர்களை கையகப்படுத்த, சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 750 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் வகையில் நிலங்களை அளவிடும் செய்யும் பணி மேற்கொண்டு. அரசு புறம்போக்கு நிலம் சுமார் 300 ஏக்கர் மற்றும் விவசாய நிலம் 4 ஏக்கர்களை அளவிட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், அப்பகுதியில் பெரும்பாலான விவசாய பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதியில் உள்ள விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டி, சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி சுமார் 1 ஆண்டாக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வளையபட்டியில் சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல் உழவர் சந்தை எதிரே உள்ள காந்தி சிலை முன்பு. சிப்காட் தொழிற்பேட்டை விவசாயப் பகுதியில் அமைத்தால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவாகும் எனக்கூறி சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாயிகள் என 100 க்கும் மேற்பட்டோர், கைகளில் பாக்கு தட்டை ஏந்தி பிச்சை எடுத்து முழக்கங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், பழனிவேல், ரவீந்திரன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top