மத்திய அரசின் தொழிலாளர் தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, நாமக்கல்லில் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் சாபில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள, தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பை வாபஸ் பெறக்கோரி, நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி நிர்வாகி தனசேகரன் தலைமை வகித்தர். சிஐடியு மாவட்ட தலைவர் அசோகன், யுடியுசி மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் வெங்கசேடன், ஏஐடியுசி செயலாளர் ராமகிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் பழனிவேலு நன்றி கூறினார்.




