Close
மார்ச் 7, 2026 4:26 மணி

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் நகை திருட்டு

மோகனூரில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

மோகனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (62). ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர். இவர், கடந்த 18ம் தேதி, மதியம் 1 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, ராசிபாளையத்தில் உள்ள தனது பேத்தி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு, வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8 கிராம் தங்க காசு, 6 கிராம் தோடு, 2 கிராமில் 2 மோதிரம், என மொத்தம் 18 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 2,000 ரொக்கம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து, புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top