Close
மார்ச் 7, 2026 1:17 மணி

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன்: ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கல்

கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் உதவியை, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 333 விவசாயிகளுக்கு ரூ. 2.93 கோடி பயிர் கடனை, ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார்.

2021ம் ஆண்டு, பயிர் கடன்கள் தள்ளுபடி திட்டத்தின்கீழ், அடங்கல் இல்லாத பயிர் கடன்கள் விதிமீறல் என கண்டறியப்பட்ட பயிர் கடன்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான தொகையை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு துறையில் 2021 ஆம் ஆண்டு, பயிர் கடன் தள்ளுபடியில் விடுபட்ட விவாயிகளுக்கு தள்ளுபடி தொகை வழங்கி, மீண்டும் அவர்களுக்கு ரூ. 2.93 கோடி மதிப்பில் பயிர் கடன் வழங்கும் விழா மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்றது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 333 பயனாளிகளுக்கு ரூ. 2.93 கோடி மதிப்பில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., கடன் உதவியை வழங்கினார்.

பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் பஸ் ஸ்டாப் அமைக்க உடனடியாக தனது எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.2.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

நிகழ்ச்சியில்  வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, பிடிஓ வனிதா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் சதீஷ்குமார், மல்லிகா, சரவணன், ராஜேந்திரன், மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர், பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top