கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உலக சாம்பியன் ஷிப் ஸ்கேட்டிங் 2024 மற்றும் 25 ஆண்டிற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மூன்று கட்டமாக வயது அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 21 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் 8 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வர்ஷா, மாதவ், ஸ்ரீதரன், பவின் குமார், இஸ்வின் ராஜ் விஜய், ப்ரதியூஸ், பிரணவ் ரக்சன் உள்ளிட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் ரயில் மூலம் தென்காசி ரயில்நிலையத்திற்கு வந்தனர். அவர்களை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் மேள வாத்தியங்கள் முழங்க பெற்றோர், ஊர் பொதுமக்கள் என பலர் பொன்னாடை, மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற வர்ஷா என்ற மாணவிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய காரினை மாணவியின் பெற்றோர் சங்கர், பத்மா தம்பதியினர் பரிசாக வழங்கினர்.




