Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

தென்காசியில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அமர் சேவா சங்கத்தின் முகப்பு படம்

தென்காசி மாவட்டம், ஆயக்குடி பகுதியில் மாற்று திறனாளிகளுக்கென செயல்பட்டு வரும் இந்த அமர்சேவா சங்கத்தில் 280 மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த வளாகத்திற்குள் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 680 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்

இந்நிலையில்  ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து வெடிபொருள் நிபுணர்கள் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வளாகத்திற்குள் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு சோதனையால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

மேலும், தற்போது காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் என்பது உண்மையா? அல்லது வதந்தியா என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும் என கூறப்படும் நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த வெடிகுண்டு சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top