நாமக்கல்லில் நடைபெற்ற, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவில், இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., ஏற்பாட்டின் பேரில், கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் குமரவேல் தலைமை வகித்தார். கலை இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் அய்யாவு வரவேற்றார். துணை அமைப்பாளர்கள் பிரபு, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




