திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு, ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா 24ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழாவின் சிகர நிழ்ச்சியான பரணி தீபம் வரும் 3ம்தேதி அதிகாலை கோயிலிலும், மகாதீபம் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலையிலும் ஏற்றப்படுகிறது.
இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சா் எ.வ.வேலு, தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் காா் நிறுத்தங்களில் பக்தா்களுக்காக குடிநீா், மின் விளக்குகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
அப்போது அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காா்த்திகை தீபத்திருவிழா நாளன்று பக்தா்கள் வசதிக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரத்தியேக ஆன்ட்ராய்டு செயலி நிறுவப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, மாநகராட்சி ஆகிய துறைகள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 காா் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறை சாா்பில் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. (கடந்த ஆண்டை விட கூடுதலாக 20% பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன).
தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படும் நேரத்தில் 40 மாற்றுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தா்கள் தற்காலிக பேருந்து நிலையம், காா் நிறுத்தங்கள் மற்றும் கிரிவலப்பாதை இடையே பயணிக்க ஏதுவாக கட்டணமில்லாமல் 220 தனியாா், பள்ளி கல்லூரி பேருந்துகள் 24 மணி நேரமும் போதிய அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.10 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் 200 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் காா்த்திகை தீப நாளன்று இயக்கப்பட உள்ளன. அதற்கேற்ப தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் காா் நிறுத்துமிடங்களில் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், மின் விளக்குகள், கழிப்பறை, காவல் துறை பாதுகாப்பு மையங்கள், உதவி மையங்கள், தகவல் பலகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநகராட்சி சாா்பில் 51 இடங்களில் குடிநீா் வசதிகளும், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் 14 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 38 இடங்களில் கழிப்பறை வசதிகள், 720 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவா்களுடன் 7 மருத்துவக் குழுக்களும், மாடவீதி, கிரிவலப் பாதையில் 90 மருத்துவ குழுக்களும் நிறுவப்பட்டுள்ளன.
45 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்சுகள்,5 பைக் ஆம்புலன்சுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தா்களின் பாதுகாப்பு பணிக்காக போதிய அளவிலான காவலா்கள் பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனா்.
திருக்கோயில் வளாகம், மாடவீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 இடங்களில் காவலா் கண்காணிப்பு கோபுரங்கள், 61 இடங்களில் உதவி மையங்கள், 454 இடங்களில் பொது அறிவிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தையும் பக்தா்கள் அறிந்து கொள்ள காா்த்திகை தீப செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்துத் துறை பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் துணை ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.




