Close
மார்ச் 7, 2026 3:10 மணி

108 ஆம்புலன்ஸ் நம்பர் மாற்றப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாக்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்

108 ஆம்புலன்ஸ்

108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம் என சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் தகவல் போலியானது அதை யாரும் நம்ப வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் 2008 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை மருத்துவ அவசர உதவிக்கு மட்டுமின்றி போலீஸ் மற்றும் தீயணைப்பு போன்ற பிற அவசர கால சேவைகளையும் வழங்கி வருகிறது.

மேலும் தேவைப்படும் இடங்களில் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அவசரகால மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, இன்னுயிர் காக்கும் சேவையில் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கிய நோக்கம் பிரசவம், நெஞ்சு வலி, சாலை விபத்து மற்றும் பல மருத்துவ அவசர நிலைகளுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பதே இதன் நோக்கம் ஆகும். இதன் மூலம் பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம் என பல எண்களை வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 108 ஆம்புலன்ஸில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. இது திட்டமிடப்பட்டு பரப்பப்படும் தவறான தகவல் ஆகும். எனவே பொதுமக்கள் இதை நம்பவேண்டாம், தங்களின் அவசர மருத்துவ உதவிக்கு வழக்கம்போல் 108 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top