Close
மார்ச் 7, 2026 1:41 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற, தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினவிழா நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், என்எஸ்எஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய நாமக்கல் மாவட்ட அலுவலக உதவி மேலாளர் வித்யா விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் மாசுபடுதலால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அனைவரும் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியேற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண்பிரகாஷ், என்எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top