நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் வார விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில், மகாகவி பாரதியார் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இந்திய மொழிகள் உற்சவம் (பாரதிய பாஷா), நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஒரு வாரம் நடைபெற்றது. பல்வேறு மொழிகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு மொழிச் சொற்களை எழுதி மரமாக காட்சிப்படுத்தப்பட்டது.
பல மொழிகளின் கதைகள் கூறுதல், பல மொழிகளில் பிறந்த நாள் வாழ்த்துகள், பழமொழி, நாட்டுப்பற்று பாடல்கள் பாடப்பட்டது. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி மொழிகளில் கடிதம் எழுதுதல் மற்றும் கதைகள் கூறும் போட்டிகள், பல மொழி சார்ந்த விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வைத்து போட்டிகள் நடைபெற்றது.
பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்துதல், பல மொழிகளில் எழுத்துகளை எழுதி வருதல், இந்திய மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுதல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான மாணவ மணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
பள்ளி சேர்மன் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.




