Close
மார்ச் 7, 2026 2:40 மணி

கோழிப்பண்ணைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தல்?: நாமக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

நாமக்கல் அருகே பொரசப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோழிப்பண்ணைகளில், நைட்ரோ ஃபைரான் எனும் ஆண்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு தீவனம் மற்றும் முட்டை மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்ன்றன. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்குப்போக மீதமுள்ள முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் கோழிப்பண்ணைகளில், கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் நைட்ரோ ஃபைரான் எனும் ஆண்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை நீண்ட நாள் கெடாமல் வைத்திருக்கும். இந்த ஆண்டி பயாடிக் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது என புகார் எழுந்தது.

இதையடுத்து ஆண்டி பயாடிக் மருந்துகள் கோழிப்பண்ணைகளில் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளும்படி உணவு பாதுகாப்புத் துறையினருக்கு அரசு உத்திரவிட்டது. இதன்பேரில் மாநிலம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல் நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட கோழிப்பண்ணைகளிலும் கடந்த 2 நாட்களாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 55 கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்து தீவன மாதிரிகள் மற்றும் முட்டை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உணவு பாதுகாப்பு அலுவலரும் 5 பண்ணைகளில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது எடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பி வைக்கப்படும். ஆய்வு முடிகள் வெளிவர இரு வாரங்கள் ஆகும். ஆய்வு முடிவுகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top