Close
மார்ச் 7, 2026 11:37 காலை

நாமக்கல் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு, 8-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப் முகாம் வரும் 29 முதல், 21 நாட்கள் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில், 2 லட்சத்து 80 ஆயிரது 600 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும், அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தகத்தின், கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு, தங்கள் கால்நடைகளை கொண்டு சென்று, கோமாரி நோய் தடுப்பூசிபோட்டுக் கொள்ளலாம்.

அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம், முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விபரம் தெரியப்படுத்தப்படும். இப்பணிக்காக, மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களைக் கொண்டு, 105 தடுப்பூசி பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினர், மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தங்களது பசு, எருமை, எருது, மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று, வரும் 29ம் தேதி முதல், ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் முகாம்களில், தங்களது கால்நடைகளுக்கு தவறாமல், கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top