Close
மார்ச் 7, 2026 2:51 மணி

நாமக்கல்லில் அரசு கல்லூரி உதவி பேராசியிரியர் பணிக்கான போட்டித்தேர்வு: 1,039 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை 1,039 தேர்வர்கள் எழுதினார்கள். மொத்தம் 71 பேர் தேர்வெழுத வரவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பி.எட். கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித்தேர்வு நடைபெற்றது.

நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட 5 மையங்களில், காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளில் இந்தத் தேர்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காலையில் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 5 மையங்களில் 1,039 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். 71 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டிஆர்பி அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து தேர்வு நடத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top