Close
மார்ச் 7, 2026 11:30 காலை

சோழவந்தானில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த பேரூராட்சி நிர்வாகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீராக மாறி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமதிற்கு ஆளாகினர்.

குறிப்பாக இந்த பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஓடியது. இது குறித்து தகவல் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்த பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர்

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக தொடர்ந்து புகார்கள் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆகையால் சோழவந்தான் அரசு மருத்துவமனை, தபால் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, பேருந்து நிலையம் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் பைப்புகளை மாற்றி புதிய பைப்புகளை அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top