Close
மார்ச் 7, 2026 1:41 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: எம்.பி. துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், கூட்டுறவு இணைப்பதிவாளர் அருளரசு, மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, வார்டு கவுன்சிலர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிப் பேசியதாவது:

தைப் பொங்கல் திருநாளை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000- ரொக்கம்ஆகியவை வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 5,40,232 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 168.09 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தலா ரூ. 3,000- ரொக்கம்வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், மாநிலத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு சுமார் 35,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையில் நாமக்கல் மாவட்டத்திற்கென தனியாக ஒரு மத்தியக் கூட்டுறவு வங்கி. மாவட்டத்தில் தனியாக நவீன ஆவின் கூட்டுறவு பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் துவங்கி நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக நாமக்கல் மாவட்டம் திகழ்ந்து வருகிறது என அவர் தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top