தை மாதம் அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசி கிடைத்து, தங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் தை அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். அதிகாலையிலே திரளான பொதுமக்கள், காவிரி ஆற்றில் புனித நீராடி, வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர்.
வாழை இழையில், பச்சரிசி, பூ, தர்ப்பை, எள் மற்றும் பூஜை பொருட்களை வைத்து வழிபட்டனர். பின்னர் அவற்றை காவிரி ஆற்றில் கரைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆற்றங்கரையில் உள்ள அசல தீபேஸ்வரர் கோயிலில் விளக்கேற்றி வழிப்பட்டன.
நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




