Close
மார்ச் 7, 2026 1:28 மணி

திருப்பரங்குன்றம் திருக்கோவில் தெப்ப திருவிழா: சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் பூத வாகனத்தில் வீதி உலா

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மீது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் ஆண்டு முதல் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் நிலையில் நேற்று தை தெப்பத் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைபெற்றது.

அதனைத் டர்ந்து, தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். இன்று இரண்டாவது நாளாக சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் பூத வாகனத்தில் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி, கீழ ரத வீதி ,மேலரத வீதி, சன்னதி தெரு வழியாக வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top