நாமக்கல் நகரில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதியை ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில் இருந்து, கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வேப்பனம், வளையப்பட்டி, எருமப்பட்டி வழியாக வரதராஜபுரம் வரை செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை, எர்ணாபுரம், வேலகவும்டம்பட்டி வழியாக வையப்பமலை செல்வதற்கு மற்றொரு புதிய வழித்தடத்திலும், நாமக்கல்லில் இருந்து காவேட்டிப்பட்டி, தொட்டிப்பட்டி, கோனாம்பரப்பு, வள்ளிபுரம் வழியாக ப.வேலூருக்கு புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதி துவக்க விழா, நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி, கொடியசைத்து, புதிய வழித்தடங்களில் பஸ் வசதியை துவக்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




