ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பயன்தரும், வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை 1.4.2003 முதல் நடைமுறைப்படுத்தக்கோரி நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கொள்ளை விளக்க செயலாளர் கதிரேசன் வரவேற்றார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் போராட்டத்தை தொடங்கி வைத்தும், மாவட்ட செயலாளர் சங்கர் முடித்து வைத்தும் பேசினர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், தேவகி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் பிரபு நன்றி கூறினார்.




