நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. வங்கியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம், மாநகர துணை மேயர் பூபதி, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு வாரிய தலைவர் கணிமொழி, வங்கி இயக்குனர்கள் டாக்டர் மாயவன், நவலடி, பாலசுப்ரமணியம், ராணி, செல்வகுமார், கவுரி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.




