Close
மார்ச் 7, 2026 1:00 மணி

தமிழகத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை: கொமதேக ஈஸ்வரன்

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இழந்தபின், தொடர்ந்து மாநில கட்சிதான் ஆட்சியில் உள்ளது, இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூறினார்.

இது குறித்து, நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒன்றும் புதிதல்ல. 2021ல் கூட்டணியில் இருந்தவர்கள்தான் இப்போதும் கூட்டணியில் உள்ளனர். அனைத்து கட்சிகளும், ஏதாவது ஒரு கூட்டணியில சேர்ந்துதான் போட்டியிட வேண்டும் என்பது கட்டாயம் ஆகியுள்ளது.

ஓ.பி.எஸ்., போவதால், எந்த கட்சியும் புதிதாக பலம் அடையப்போவதில்லை. காரணம், ஓ.பி.எஸ்., உடன் இருந்தவர்கள் பலரும் தற்போது அவரிடம் இல்லை. எல்லோரும் சென்றுவிட்டனர். கூட்டணி வலுவாக இருந்தால்தானே, போட்டி பலமா இருக்கும். போட்டி பலமாக இருந்து வெற்றிபெறுவதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவம்.

கொமதேக கட்சிக்கு கூடுதலாக சீட் கேட்பது குறித்து, அந்த சூழ்நிலை வரும்போது, கூட்டணி கட்சி தலைவர் எப்படி இருக்கிறாரோ அந்த நேரத்தில் பேசிக்கொள்வோம். தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவது குறித்து, கூட்டணி தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சி, இந்தியாவில் பல புள்ளி விபரங்களின் அடிப்படையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் நம்பர் 1 ஆக விளங்கி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் டபுள் இன்ஜின் என்பது கிடையாது. காங்கிரஸ் கட்சி ஆட்சி இழந்தபின் என்றைக்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததோ அன்று முதல், மாநில கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற ஒரு சிலர் ஆட்சியில் பங்கு என பேசிக் கொண்டிருக்கின்றனர். டில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட யாரும் இதுபற்றி பேசவில்லை. அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் தங்களது சொந்த கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top