Close
மார்ச் 7, 2026 12:09 மணி

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல் அறிமுக விழா மற்றும் பைந்தமிழ் அறிஞருக்குப் பாராட்டு விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் தமிழறிஞர் நா. ஆண்டியப்பன் எழுதிய சிங்கப்பூர் வரலாற்று நூலான வாமன தீவு சிங்கப்பூர் நூல் அறிமுக விழா மற்றும் பைந்தமிழ் அறிஞருக்குப் பாராட்டு விழா புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வாமனத்தீவு நூலின் 8 ஆண்டு கால உழைப்பு குறித்தும் இந்த நூல் எந்த சாயலும் இல்லாமல் சிங்கப்பூரின் வரலாற்றை வரலாறாகவே உண்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்றும் இந்த நூல் சீனம், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூரின் கட்டுப்பாடுகள் குறித்தும் அதன் நிர்வாகம் குறித்தும் தனக்கும் சிங்கப்பூருக்குமான அனுபவம் குறித்தும் பல இன மக்களை முன்னிலைப்படுத்தி எப்படி வளர்ந்திருக்கிறது என்றும் முக்கியமான ஆவண நூலாக வெளிவந்திருக்கிறது என்று உரையாற்றினார்.

முன்னதாக தலைமை உரையாற்றிய தலைவர் தங்கம் மூர்த்தி அவர்கள் கூறுகையில், சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்தியாவிலிருந்து தான் கலந்து கொண்ட அனுபவங்களையும், வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளி கௌரவிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

நூல் குறித்து அறிமுக உரையாற்றிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்முனைவர் சொ.சுப்பையா அவர்கள் வாமனத் தீவு நூல் குறித்தும் பல்வேறு வரலாற்று தகவல்களை தொடர்பு படுத்தி சிங்கப்பூர் பல்வேறு வகையான வளர்ச்சி குறித்தும் புள்ளிவிபரங்களோடும், லீ குவான் யூ வை தமிழ் மக்கள் எவ்வாறு மதிக்கிறார்கள் என்றும் பேசினார்.

ஏற்புரையாற்றியற நூலாசிரியர் ஆண்டியப்பன் அவர்கள் வாமனத் தீவு நூலாக்கம் குறித்தும், சிங்கப்பூர் குறித்து வரலாற்று நூல் இதுவரை யாரும் எழுதவில்லை, நாம் ஏன் எழுதக்கூடாது என்ற உந்துதலில் எழுதினேன் என்றார் .

முன்னதாக சிங்கப்பூர் கவிமாலை நிறுவுநர், கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ நட்புரையாற்ற  கல்வியாளர் சௌமா.ராஜரத்தினம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

செயலாளர் முனைவர். மகாசுந்தர் வரவேற்புரையாற்ற துணைச் செயலாளர் பீர் முகமது தொகுப்புரையாற்றினார். பொருளாளர் பேராசிரியர் மு.கருப்பையா நன்றியுரையாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top