Close
மார்ச் 7, 2026 1:00 மணி

அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி: அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற, மறைந்த தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம், எம்எல்ஏ., ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாமக்கல்லில் நடைபெற்ற மறைந்த முதல்வர் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவில் 57வது நினைவு நாள் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய தலைவர் கணிமொழி, மாநில நிர்வாகி டாக்டர் மாயவன், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோவன், நகர செயலாளர்கள் ஆனந்த், சிவகுமார், மகளிரணி ராணி, திமுக பிரமுகர்கள் ராஜகோபால், அம்மையப்பன், சரவணன், ஈஸ்வரன், பிரபு, ரபீக், மார்ட்டின் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top