Close
மார்ச் 7, 2026 1:47 மணி

அரசு மகளிர் மேல்நிலைப்பளியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா: அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், புதிய குடிநீர் தொட்டியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அருகில் ராஜேஷ்குமார், எம்.பி., ராமலிங்கம், எம்எல்ஏ ஆகியோர்.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா மற்றும் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி;., ஆகியோர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளின் குடிநீர் தேவைக்காக, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு ராஜேஷ்குமார், எம்.பி., தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில், 760 ச.மீட்டர் பரப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சுமதி அனைவரையும் வரவேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top