Close
மார்ச் 7, 2026 2:51 மணி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு: ஊழியர்கள் பணியிடை நீக்கம்

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனர். இந்நிலையில், கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு தலா 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரு நாட்களுக்கு முன் டிக்கெட் கொடுக்கும் பணியில் பேச்சியம்மாள் என்ற ஊழியரும், சுவாமி சன்னதியில் டிக்கெட்டுளை பரிசோதிக்கும் பணியில் சிவராஜ் என்பவரும் இருந்துள்ளனர். இந்த இருவரும் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து, பேஷ்கார் அன்பழகன் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, பக்தர்கள் வழங்கும் டிக்கெட்டுகளை சிவராஜ் கிழிக்காமல் தானே பதுக்கி வைத்துக்கொண்டு, அதை பேச்சியிடம் கொடுத்து வந்து அதை மீண்டும் பக்தர்களிடம் கட்டணம் வாங்கிக்கொண்டு புது டிக்கெட் போல் வழங்கியுள்ளனர்.

இதுபோன்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகளை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இருவரையும் கோயில் இணைக்கமிஷனர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோயில் ஊழியர்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு கருதியும் தற்போது கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் என கோயில் முழுவதும் 174 கேமராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களின் கட்டண டிக்கெட்டுகளை விற்று பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கோயில்களை கண்காணிக்க ஆணையாளர், மண்டல இணை ஆணையர், உதவி ஆணையாளர்கள், கோயில் செயல் அலுவலர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள் இருந்தும் முறைகேடுகள் குறையவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையாளர், தனி கவனம் செலுத்த பொது மக்கள் கோரியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top