Close
மார்ச் 7, 2026 2:51 மணி

மதுரை அருகே வானில் பறந்த பிரம்மாண்ட பலூன் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு

நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வானில் பறந்த பிரம்மாண்ட பலூன் திடீரென தரையிரங்கியது

மதுரையில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை வான் சுற்றுலா காணும் வண்ணம் தனியார் நிறுவனம் விமான மூலம் ரூபாய் 6 ஆயிரம் கட்டணத்தில் ஏற்பாடு செய்தது.

தற்போது அழகர் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ரூபாய் 15 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்து மதுரையை 10 கிலோமீட்டர் சுற்றளவில் ‘வானில் சுற்றி பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்தநிலையில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சுமார் ஏழு பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்த அந்த பலூன் பரிசோதனை முறையில் இன்று காலை வானில் பறக்க விடப்பட்டது. ராட்சச பலூன் வானில் பறந்த நிலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சி பகுதியில் தரை இறங்கியது.

வானில் பறந்த பிரம்மாண்ட பலூன் வயல்வெளியில் தரை இறங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் விபத்து என்ற அச்சத்தில் அருகில் சென்று பார்த்தனர். அப்போது தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வான்வழி சுற்றுலா பயணத்திற்கான பரிசோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது என்று தெரிய வந்தது.

பின்னர்  ஊழியர்கள் பலூனை சரி செய்து மீண்டும் பறக்க விட்டு புறப்பட்டு சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top