Close
மார்ச் 7, 2026 1:27 மணி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவருக்கு ஆன்லைன் கவுன்சலிங் துவக்கம்

கோப்புப்படம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் (பி.ஜி., டி.ஆர்.பி.,) வெற்றி பெற்றவர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு (ஆன்லைன் கவுன்சலிங்) நாமக்கல்லில் துவங்கியது.

2025-26ம் கல்வியாண்டிற்கான, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர் (கிரேடு-1) 1,996 காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, இண்டர்நெட் மூலம் ஆன்லைன் கவுன்சலிங் நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,.

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பள்ளிகளைத் தேர்வு செய்யும், ஆன்லைன் கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், ஒரு சில மாவட்டங்களில் துவங்கியது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்லைன் கவுன்சலிங்  துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் பி.ஜி., டி.ஆர்.பி., தேர்வில் வெற்றி 59 பேர் இதில் பங்கேற்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமையில் முதல் நாள் கவுன்சலிங் நடைபெற்றது. கணிதம், இயற்பியல், வேதியியியல், பொருளியல் என 6 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றது. இந்த பாடங்களில், நாமக்கல் மாவட்டத்தில், காலிப்பணியிடம் இல்லாததால், வெளிமாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை, தேர்வர்கள் தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top