Close
மார்ச் 7, 2026 1:41 மணி

சோழவந்தான் அருகே அரைகுறையாக நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை: பக்தர்கள் வேதனை

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வருகை தந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வது வழக்கம்

இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், ஆகையால் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் நிரப்பி விட்டு சென்றதாக கூறப்படுகிறது பின்னர் சாலை அமைக்காததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்

இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சோழவந்தான் வாடிப்பட்டி மெயின் ரோட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோர்களை அழைத்து வருபவர்கள் கோவிலுக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர் .

15 நாட்களுக்கு மேலாக ஜல்லி கற்கள் போட்டு சாலை அமைக்கப்படாத நிலையில் உள்ள இந்த பகுதியில் உடனடியாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top