Close
மார்ச் 7, 2026 1:26 மணி

காரியாபட்டி – மல்லாங்கிணறு பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை. உணவு திட்டம் துவங்கப்பட்டது .

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த திட்டம் நேற்று தமிழகம் முழுவதிலும் தொடங்கப் பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் துவக்க நிகழ்ச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூராட்சித்தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் பணிபுரியும் 77 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

மல்லாங்கிணறு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்க நிகழ்ச்சி மேட்டுப்பட்டி சமுதாய கூடத்தில் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் துளசி தாஸ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 39 பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. துணைத்தலைவர் மிக்கேல் அம்மாள், தி.மு.க. நகர செயலாளர் முருகேசன் மற்றும் பே ரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம், வாரந்தோறும் திங்கட்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், செவ்வாய் கிழமை ரவா கிச்சடி மற்றும் கார சட்னி, புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா மற்றும் தேங்காய் சட்னி, வெள்ளிக்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், சனிக்கிழமை ரவா பொங்கல் சாம்பார், ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி, சாம்பார் போன்ற உணவு வகைகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் சுவையாகவும், தரமாகவும் சமையல் செய்து வழங்கப்பட உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top