Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்டர்நெட் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இன்டர்நெட் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேசிய தகவல் மைய அலுவலர் தண்டே தேஜா பேசினார்.

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பான தெரிவுகள், பாதுகாப்பான ஏஐ பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில், இண்டர்நெட் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட தேசிய தகவலியல் அலுவலர் தண்டே தேஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இண்டர்நெட் மற்றும் வெப்சைட்டுகளை பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், ஏஐ பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் அதனை தவறான முறையில் கையாண்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

மேலும், தற்போதைய காலத்தில் போலியான வீடியோக்கள், போலியான செய்திகள் மற்றும் தவறான வழிகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதையும், மாணவ மாணவியர் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.

நாமக்கல் மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் அலுவலர்கள் ராஜேஷ்குமார், சுரேஷ், விலங்கியல் துறைத் தலைவர் ராஜசேகரபாண்டியன், உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் மாதவன், சுவயம் கல்லூரி தொடர்பு அலுவலர் பாபு, கம்ப்யூட்டர் துறை தலைவர் சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top