திருவண்ணாமலை பழமை வாய்ந்த தேரடி ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
கும்பாபிஷேக விழாவையொட்டி யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை ஆறாம் கால யாக சாலை பூஜை யாக சாலையில் நடைபெற்றது.
யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலசங்களில் உள்ள புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட அன்பழகன், அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சுவாமி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீராமச்சந்திர பெருமாள், கைலாசநாதா் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஸ்ரீராமச்சந்திர பெருமாள், அனப்பத்தூா் கைலாசநாதா், சோழவரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள 1,200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீராமச்சந்திர பெருமாள் (யோகராமா்) கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சுமாா் ரூ. ஒரு கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.
தொடா்ந்து, கோவிந்தராஜன், ஸ்ரீராம் பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கங்கை, யமுனை, சரஸ்வதி, பிரம்மபுத்திரா, காவேரி உள்பட புண்ணிய நதிகளில் இருந்து சேகரித்து வரப்பட்ட புனித கலச நீா் யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டு, கோயில் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.
பின்னா், மூலவா் ராமச்சந்திர பெருமாள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கலச நீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை திருக்கல்யாண உற்சவம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
விழாவில் ஆரணி எம்.பி., தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாண்டுரங்கன், கே.வி.சேகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் மனோகரன், எழில்மாறன், எம்.டி.மனோகரன், எஸ்.எஸ்.அன்பழகன், நகரச் செயலா் முருகன், பேரூராட்சி மன்றத் தலைவா்கள் சுதா முருகன், வேணி ஏழுமலை, இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பிரகாஷ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ராமச்சந்திர பெருமாளை வழிபட்டனா்.
கைலாசநாதா் கோயில்: செய்யாறு வட்டம், அனப்பத்தூா் பகுதியில் அமைந்துள்ளது 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஸ்ரீஆனந்தவல்லி சமேத கைலாசநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் சுமாா் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்ற பின்னா், சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் கலச பூஜை செய்து கோயிலை வலம் வந்தனா். பின்னா், கைலாசநாதா் மற்றும் ஆனந்தவல்லி தாயாா் சந்நிதிகளின் கோபுரத்துக்கு கலச பூஜை செய்து, தீபாராதனை காண்பித்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
தொடா்ந்து, ஆனந்த வல்லி தாயாா் கைலாசநாதா் திருக்கல்யாண வைபவ நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் திராளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.




