Close
மார்ச் 7, 2026 1:07 மணி

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: வாடிப்பட்டி குறைதீர்க்கும் கூட்டத்தில் காரசார விவாதம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு , வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, கால்நடை உதவி மருத்துவர் வைகறை செல்வி, பெரியார் பாசன கால்வாய் உதவி பொறியாளர் மொக்க மாயன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார், பாசன ஆய்வாளர் முகமது சுல்தான், காவல் உதவி ஆய்வாளர் திவ்யா, வனத்துறை அதிகாரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார். இந்த கூட்டத்தில், வாடிப்பட்டி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்த பின்னர் அதை மீறி செயல்படு பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரசாரமாக விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.

கிராமப்புறங்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் பதிப்பு பணியில் முடிந்த பின் சிமென்ட் தரை, வண்ண கலர் கற்களில்காணப்படும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்றும், சிறு குறுநில குத்தகைதாரர்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை அனுமதிக்க அடங்கல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

முடிவில், ஆதி முத்துக்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top